வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

286

வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (20.05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

கண்டி வீதியால் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியின் சாரதியினால் வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Acci acci1