தாய் தந்தை விவாகரத்து : 13 வயது சிறுவன் மாயம்!!

771


அம்பாறை..



அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் சிறுவன் காணாமல்போயுள்ளதாக தந்தையார் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.



வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தாயாரும் சொறிகல்முனையைச் சேர்ந்த தந்தையாரும் விவாகரத்து செய்துள்ள நிலையில், தீபன் சயான் என்ற 13 வயது சிறுவன் தந்தையாருடன் இருந்துள்ளார்.




இந்நிலையில், சம்பவதினமான நேற்று (26.02) வீரமுனை பகுதியில் மரணவீடு ஒன்றிற்கு தந்தையார் சிறுவனை அழைத்துச் சென்ற நிலையில், சிறுவன் காணாமல் போயுள்ளார்.


சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.