காணாமல் போன கணவன்.. சுறா மீன் வயிற்றுக்குள் கிடைத்த கை.. நிலைகுலைந்து போன மனைவி!!

1158

அர்ஜென்டினாவில்..

அர்ஜென்டினாவில் மர்மமான முறையில் நபர் ஒருவர் மாயமான சூழலில் தற்போது அவரை பற்றி கிடைத்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்த வர்ஜினியா ப்ரக்கர் என்ற பெண், தனது கணவரான Diego Alejandro கடற்கரை ஒன்றிற்கு சென்றிருந்த போது காணமால் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மர்மமான முறையில் காணாமல் போன டியாகோவை போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வந்துள்ளனர். அப்படி இருக்கையில், அவர் காணாமல் போனதாக சொன்ன கடற்கரை அருகே டியாகோவின் வாகனம் மற்றும் ஹெல்மெட் உள்ளிட்டவற்றை போலீசார் இரண்டு நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

மறுபக்கம் தொடர்ந்து டியாகோவை போலீசார் தேடி வந்த சூழலிலும் அவர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. சுமார் எட்டு நாட்களாகியும் காணாமல் போன தனது கணவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மனைவி வர்ஜீனியாவும் கடும் கவலையில் இருந்து உள்ளார்.

அப்படி இருக்கையில் தான், அவரை நிலைகுலைய வைக்கும் வகையிலான தகவல் ஒன்றும் வந்து சேர்ந்துள்ளது. அதன்படி மீனவர்கள் தாங்கள் பிடித்த சுறா மீன் ஒன்றை சுத்தம் செய்த சமயத்தில் அதன் வயிற்றுக்குள் மனித உடல் பாகங்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

உடனடியாக இது பற்றி அவர்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவித்த சூழலில் அவர்களுடன் வர்ஜீனியாவும் அங்கே வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த மீனின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட மனிதர் கை ஒன்றில் குத்தப்பட்டிருந்த வித்தியாசமான டாட்டூவை வைத்து அது காணாமல் போன தனது கணவருடைய உடல் தான் என்பதையும் வர்ஜீனியா உறுதி செய்தார்.

காணாமல் போன தனது கணவரின் உடல் பாகங்கள், சுமார் எட்டு நாட்கள் கழித்து மீனின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலை ஏற்பட்டதால் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் உள்ளார் அவரது மனைவி வர்ஜீனியா. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.