வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக மீட்பு : அதிர்ச்சியில் மக்கள்!!

7006


குட்செட் வீதி..



சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என நால்வருள்ள குடும்பம் இன்று (07.03.2023) காலை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்கையில் பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.




இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலங்களை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.