உரிமையாளரின் சடலத்தை சாப்பிட்டு 1 மாதம் உயிர் வாழ்ந்த நாய்!!

466

Dog

பிரான்ஸ் நாட்டில் நாய் ஒன்று, தன்னை வளர்த்த உரிமையாளரின் சடலத்தை சாப்பிட்டு ஒரு மாத காலமாக உயிர் வாழ்ந்துள்ளது.

பிரான்சின் யோர்க்சையர் நகரில் பூட்டி கடந்த வீட்டில் இருந்து, 64 வயது மூதாட்டியின் அழுகிய சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி, தனக்கு துணையாக ஒரு நாயை மட்டும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இறந்து, ஒரு மாத காலமாகிவிட்டதால், இவரது நாய் உண்பதற்கு உணவு இல்லாமல் மூதாட்டியின் சடலத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதிற்கான அடையாளம் ஏதும் இல்லை என்றும் இவர் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். எனினும் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.