இரவில் வேலை முடித்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த யுவதிக்கு நேர்ந்த கொடுமை!!

628

பாணந்துறையில்..

வாதுவ பகுதியில் வேலை முடித்து வீட்டுக்கு கால்நடையாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 18 வயதான யுவதியை, தமது வாகனத்தில் ஏற்றிச் சென்று கூட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கிய நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

பாணந்துறை பகுதியிலுள்ள கடையொன்றில் பணிபுரியும் யுவதி இரவு நேரம் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது யுவதியை வீடு வரை தமது வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக சிறிய லொறி ஒன்றில் வந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து யுவதி லொறியில் ஏறியுள்ளார். பின்வத்தை நோக்கி லொறி சென்று கொண்டிருந்த போது, ​​தான் இறங்க விரும்புவதாக யுவதி கூறிய நிலையில் அதனை செவி மடுக்காது , வாகனத்தை நிறுத்தாமல் வாதுவ பிரதேசத்தில் உள்ள ஆட்களற்ற தோட்டத்திற்கு கொண்டு சென்ற யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட யுவதியின் தாயார் சிறையில் இருப்பதால் தனது பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை தான்னால் அடையாளம் காட்டமுடியுமென யுவதி தெரிவித்தாக கூறும் பாணந்துறை தெற்கு பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.