குளியலறையில் ப.ரி.தாபமாக இ.ற.ந்.து கி.ட.ந்.த பு.து.ம.ண.த் த.ம்.ப.தி : போ.லீஸ் தீ.வி.ர வி.சா.ர.ணை!!

340


மும்பையில்..



மு.ம்.பை, கா.ட்.கோ.ப.ர் கி.ழ.க்.கு.ப் ப.கு.தி.யி.லு.ள்.ள ப.ந்.த் ந.க.ரி.ல் அ.டு.க்.கு.மா.டி.க் கு.டி.யி.ரு.ப்.பி.ல் வ.சி.த்.த.வ.ர் தீ.ப.க் ஷா. இ.வ.ரி.ன் ம.னை.வி தீ.னா. இ.வ.ர்.க.ள் இ.ர.ண்.டு பே.ரு.ம் பா.த்.ரூ.மி.ல் நி.ர்.வா.ண.மா.க ம.ய.ங்.கி.ய நி.லை.யி.ல் இ.ற.ந்து. கி.ட.ந்.த.து க.ண்.டு.பி.டி.க்.க.ப்.ப.ட்.ட.து.



வீட்டு வேலைக்காரப் பெண் வந்து பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே அந்தப் பெண் தீனாவுக்கு போன் செய்து பார்த்தார். ஆனால், போன் எடுக்கப்படவில்லை. அதேசமயம் போன் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து வந்தது. உடனே சந்தேகமடைந்த வேலைக்காரப் பெண், தீபக்கின் தாயாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.




தீபக்கின் தாயார் அதே கட்டடத்தில் வசிக்கும் தன்னுடைய உறவினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். உடனே அந்த உறவினர் தன்னிடமிருந்த மாற்றுச் சாவியை எடுத்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, பாத்ரூமில் இருவரும் நிர்வாணமாக மயங்கிய நிலையில் கிடந்தனர்.

உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து பார்த்து இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவரின் உடல்களும் ராஜாவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


ஆனால் என்ன காரணத்தால் இருவரும் இறந்தனர் என்பது குறித்து டாக்டர்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. உடல் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

பாத்ரூமிலிருந்த தண்ணீரைச் சுடவைக்கப் பயன்படும் கைஸரிலிருந்து வெளியான வாயு காரணமாக இறந்தார்களா அல்லது இருவரும் வயாகரா அல்லது ஹோலி பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் பாங் எனப்படும் ஒரு வகை பானம் குடித்ததால் இறந்தார்களா என்ற குழப்பம் இருந்துவருகிறது. போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.