பாடசாலை மாணவன் உயிரைப் பறித்த விபத்து : மற்றொருவர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில்!!

534

விபத்தில்..

நிவித்திகலை பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (10) இடம் பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிழந்துள்ளார். சம்பவத்தில் தொளஸ்வலை தோட்டத்தைச் சேர்ந்தவரும் தேல தமிழ் மகா வித்தியாலத்தில் தரம் 09 இல் கல்வி கற்பவருமான மேர்வின் சொலமன் (வயது 14) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மற்றொருவர் படுகாமடைந்த நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினம் மாலை 5.30 மணியளவில் நிவித்திகலை பகுதியிலிருந்து இரத்தினபுரி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்படி மாணவன் உயிழந்துள்ளார்.

காயமடைந்த மற்ற நபர் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலை அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து குறித்து நிவித்திகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த மாணவனின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்ற நிலையில் அவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதால் தனது சகோதரனின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் எனவும் தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.