சீனாவில் தற்கொலைத் தாக்குதல் : 39 பேர் பலி, 94 பேர் காயம்!!

269

China

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள உரும்கி காய்கறி மார்க்கெட்டில் நேற்று 2 வாகனங்களில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர். 94 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 தீவிரவாதிகளை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கைதானவர்கள் சட்டவிரோதமான மத நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தீவிரவாதிகளை வேட்டையாடி ஒடுக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது. தீவிரவாதிகளை பிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். மேலும், வெடிபொருட்கள் தயாரிக்கும் இடம், தீவிரவாதிகள் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.