புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மயிலாடிக்காடு கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு (36), அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா(21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.

துரைக்கண்ணு கட்டட வேலை செய்து வந்துள்ளார், பவித்ரா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அண்ணன் – தங்கை உறவு என கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரத்தை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து பவித்ரா தனது காதலன் துரைக்கண்ணுவிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் துரைக்கண்ணுவால் பவித்ராவை மறக்க முடியவில்லை. அண்ணன் – தங்கை, சித்தப்பா – மகள் என்ற உறவுகளைச் சொல்லி பிரிக்க நினைக்கிறார்கள்.

அதனால் வீட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று துரைக்கண்ணு அழைத்துள்ளார். இதற்கு பவித்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் பவித்ராவிற்கு உடல்நலமின்றி வீட்டில் இருந்துள்ளார்.

தன்னை சந்திக்கவில்லை, பேசவில்லை என்று மன வேதனையும் கோபமும் கொண்ட துரைக்கண்ணு, நேற்று பவித்ரா அவரது வீட்டில் தனியாக இருந்த போது துணைக்கண்ணு அங்கு சென்றுள்ளார்.

அப்போது பவித்ராவுக்கு தாலி கட்ட அதற்கு பவித்ரா மறுப்பு சொன்ன போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த அரிவாளால் பவித்ராவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

அதோடு தனது வீட்டிற்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் துரைக்கண்ணு. கூலி வேலைக்குச் சென்ற பவித்ரா குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கழுத்தறுபட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனால் கதறி அழுதனர்.

அங்கு விரைந்த போலீசார் பவித்ரா உடலை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் துரைக்கண்ணுவை கைது செய்ய சென்ற போது அவரும் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.

பின்னர் அவரது உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





