பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த சைகோ கைது!!

291

Arrest

இந்தியாவின் விருதுநகரில் பெண்ணை கொலை செய்து குழி தோண்டி புதைத்த சைக்கோ கொலையாளியை பொலிஸார் கைது செய்தனர். கொலையாளி மேலும் பல பெண்களை கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கரிசல்பட்டி. இந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் குடிசை அமைத்து அதில் வசித்து வருபவர் சத்தியமோகன் (36). இவர் அந்த பகுதியில் சைகோ போல் சுற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2ம் திகதி அவரது குடிசையின் அருகே மண்டை ஓடு மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஏழாயிரம்பண்ணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே பொலிஸார் விரைந்து சென்று மண்டை ஓடு தெரிந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது உள்ளே பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது.

அந்த பெண் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. குடிசையில் வசித்து வந்த சத்திய மோகனையும் காணவில்லை. இதனால் பொலிஸாருக்கு அந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் இந்த கொலையில் விசாரணை செய்ய வெம்பக் கோட்டை ஆய்வாளர் செல்வம் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

விசாரணையில் தலைமறைவாகிவிட்ட சத்தியமோகன் மும்பைக்கு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை பொலிஸார் மும்பை விரைந்து சென்றனர்.

பொலிஸார் மும்பை வந்ததை அறிந்த சத்திய மோகன் அங்கு இருந்து தப்பி நெல்லை வந்துவிட்டார். இந்த விபரம் அறிந்த பொலிஸார் நெல்லையில் பதுங்கி இருந்து அவரை தேடினர்.

இந்த நிலையில் நேற்று இரவு நெல்லை பேருந்து நிலையத்தில் நின்ற சத்திய மோகனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை ஏழாயிரம்பண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது சத்தியமோகன் கூறும்போது, குடிசை வீட்டில் என்னுடன் தங்கி இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன். பின்னர் பிணத்தை குழிதோண்டி புதைத்தேன் என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சத்தியமோகன் அடிக்கடி பெண்களை குடிசைக்கு அழைத்து வருவதும், பின்னர் அவர்கள் மாயமாகி போவதும் தெரியவந்தது.

எனவே அவர்களையும் சத்தியமோகன் கொன்று வேறு எங்கும் புதைத்து வைத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொலிஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.