20 பற்களை ஒரே நேரத்தில் பிடுங்கி மூதாட்டியைக் கொன்ற வைத்தியர்!!

319

Denta

அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள என்ஃபீல்ட் மற்றும் டாரிங்டன் நகரில் பல் மருத்துவமனைகளை நடத்தி வரும் இந்திய வைத்தியர் ராஷ்மி பட்டேல். கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி தன்னுடைய பழுதடைந்த பற்களை அகற்றி விட்டு, மாற்றுப் பல் பொருத்திக் கொள்ள ஜுடித் கேன் என்ற 64 வயது பெண்மணி இவரது கிளினிக்குக்கு வந்தார்.

அவரை பரிசோதித்த போது மொத்தப் பல்லுமே சொத்தைப் பல்லாகவே இருந்தன. ஜுடித் கேனின் 20 சொத்தைப் பற்களையும் ஒரே நேரத்தில் பிடுங்கிய வைத்தியர், அவரது கதறலை எல்லாம் பொருட்படுத்தாமல் புதிய பற்களையும் அப்போதே கட்டி விடுவதில் மும்முரமாக ஈடுபட்டார்.

இதில் மூச்சுத் திணறி அந்த பெண்மணி திக்குமுக்காடுவதை கண்ட வைத்தியரின் உதவியாளர், உடனடியாக வெளியே ஓடிப்போய் 911க்கு அழைப்பை மேற்கொண்டார். அவர்கள் வந்து சேர்வதற்குள் அந்த மூதாட்டியின் கதை முடிந்துப் போய் இருந்தது. இதையடுத்து, வைத்தியர் ராஷ்மி பட்டேலின் தொழில் அனுமதியை இரத்து செய்த பொலிசார், அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு மீதான விசாரண அடுத்த மாதம் 18ம் திகதி தொடங்கவுள்ளது. இந்த கைராசிக்கார வைத்தியர் இதற்கு முன்னர் கூட ஒருவரை பரலோகம் அனுப்பியுள்ளார். மேலும் ஒரு நோயாளிக்கு பல் சிகிச்சை அளித்த போது அவரது தொண்டையில் வைத்திருந்த பஞ்சு உள்ளே போய் சிக்கிக் கொண்டதில், மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட அவர், இருதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புக்காக 6 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.