இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பதவி ஏற்க உள்ளார். இவ்விழா மாலை 6 மணிக்கு புதுடெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
பதவி ஏற்பு விழாவுக்கு சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள், பாஜ கூட்டணி கட்சி தலைவர்கள், மோடியுடன் நட்புடன் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். இவேளை பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்பும் இந்திய பிரதமரின் பதவியேற்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்காமல் புறக்கணிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ராஜபக்ஷ பங்கேற்பதால் முதல்வர் ஜெயலலிதா அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கவுள்ளனர்.