வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்!!

361

Accident

வவுனியா நெடுங்கெணி பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளும் கன்டர் வாகனமும் மோதியதில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுமடுவில் இருந்து நெடுங்கேணி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கன்டர் ரக வாகனம் மோதியதிலேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த ரா.ஆனந்தகுமார் என்ற குடும்பஸ்தர் பலியாதுடன் கோ.ஜெயரூபன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி ரா.ஆனந்தகுமார் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.