வவுனியாவில் வீட்டில் தனித்திருந்த சிறுமி துஷ்பிரயோகம்!!

338

Abuse

வவுனியா சமனங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். சிறுமியை சீரழித்த 32 வயதான காமுகனை ஊர்மக்கள் ஒன்று திரண்டு மடக்கி பிடித்து தர்மஅடி வழங்கிய பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சமனங்குளத்தில் வசிக்கும் குடும்பப் பொண்ணொருவருக்கு இளைஞரொருவருடன் அறிமுகம் இருந்துள்ளது. அவரிடம் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமையும் இவ்வாறு வந்திருக்கிறார். அந்த சமயத்தில் பெண் வீட்டில் இருக்கவில்லை. அவரது 15 வயதான மகள் மட்டுமே தனித்திருந்தார். அவர் பூப்படைந்து 14 நாட்கள்தான் ஆகின்றது.

இளைஞனின் வரவை தொலைபேசியில் தாயாருக்கு சிறுமி அறிவித்திருக்கிறார். தான் வேலைக்கு சென்று விட்டதாகவும், வந்த இளைஞனிற்கு சமையல் செய்யுமாறும் தாய் கூறியிருக்கிறார். இதனையடுத்து சமையல் வேலைக்கு தயாரான சிறுமியை அந்த இளைஞன் இஸ்டம் போல துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளான்.

வீட்டிற்கு இளைஞன் சென்றதையும், நீண்ட நேரமாக திரும்பி வராததையும் அவதானித்த அயலவர்கள் அங்கு வந்தபோது, இளைஞன் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திக் கொண்டிருப்பதை கையும் மெய்யுமாக பிடித்தனர்.

உடனே ஊர்மக்கள் ஒன்று திரண்டு இளைஞனை வீட்டிற்கு வெளியில் இழுத்து வந்து நல்ல கவனிப்பு வழங்கினார்கள். பின்னர் பொலிசிற்கு அறிவிக்கப்பட்டது. அங்கு வந்த பொலிசார் சிறுமியை உடனே வைத்திய பரிசோதனைக்கு அனுப்பாமல் ஊர்மக்கள் முன்னிலையில் வைத்து விசாரணை செய்தனர். விசாரணைகளை முடித்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.