மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் சட்டத்தரணி : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

396

புலத்வெல்கொடவில்..

பெல்மதுல்ல புலத்வெல்கொட பிரதேச வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் 2மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த திருமதி துஷ்மந்தி அபேரத்ன (40) என்பவரின் சடலம் அவரது படுக்கையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காலையில் அவரது வீட்டுக்குச் சென்ற பணிப்பெண் பெண் சட்டத்தரணியின் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 30 ஆம் திகதி இரவு முதல் வழக்கறிஞரின் கணவர் வீட்டில் இல்லை எனவும் அவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பில் பணிப் பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளளதுடன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.