கல்லூரியை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்திய சிறுமி!!

282

Girl

அயர்லாந்தில் சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தின் கோ- மெத் நகரில், கவுடா ரெமிகேட் என்ற 17 வயது பெண், பொயன் கமுனிடி என்ற கல்லூரியில் பயின்று வந்தார்.
தனது பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு பேருந்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த இவர், திடீரென மாரடைப்பில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பொயன் கல்லூரியின் குழுவினர் கூறுகையில்..

கவுடாவின் மரணம் மேலாண்மை குழுவின் உறுப்பினர் ஜேம்ஸ் ஒ சியா மற்றும் ஒட்டு மொத்த கல்லூரியையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்றும் இச்சம்பவத்தால் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர் எனவும் தங்களது வருதத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 3 வருடங்களுக்கு முன் கவுடாவின் தாயாரும் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.