கிளிநொச்சியில் சோகம் : திருமணமான ஒரு வருடத்தில் இளம் பெண் மரணம்!!

645

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – பூநாகரி பகுதியில் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இளம் குடும்பப் பெண் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் சிவரூபன் கேம்சலா வயது – 26 என்ற இளம் குடும்பப் பெண் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் கணவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வருகின்றதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் குறித்த பெண் டெங்கு நோயினால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், இளம் பெண் டெங்கிற்கு பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.