முல்லைத்தீவில் நேர்ந்த கோர விபத்து.. இளைஞன் பரிதாபமாக பலி!!

753

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குழந்தை யேசு கோயில் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டன. இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு, 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவைச் சேர்ந்த கி.ஜெமில்ராஜ் (வயது – 36) என கூறப்படுகின்றது.