வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இன்று (27.05) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.