நடிகர் சந்தானம் மீது அளித்த புகார் குறித்து பொலிசில் விசாரித்த பாக்யராஜ்!!

247

Santhanam

நடிகர் பாக்யராஜ், கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்பட விவகாரம் தொடர்பான புகார் குறித்து சென்னை காவல் ஆணையரை சந்தித்து பேசியுள்ளார்.

நடிகர் பாக்யராஜ் அளித்துள்ள புகாரில், இன்று போய் நாளை வா என்ற திரைப்படத்தின் கதை உரிமை என்னிடம் இருக்கும்போது அதே கதையை கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் என்னை கேட்காமல் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், இதில் நடிகர் சந்தானம் உள்பட 3 பேர் மோசடி செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்ததோடு, நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகார் குறித்த விசாரணைக்காக காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு சென்ற பாக்யராஜ் ஆணையர் ஜோர்ஜை சந்தித்து தனது புகார் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.