வவுனியா குளத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!(2ம் இணைப்பு)(படங்கள்)

428

வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

அக் குளத்திற்கு நீராடச் சென்றவர்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து பொலிசார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

குளத்தின் கரையில் அண்மித்ததாக நீருக்குள் தலையை அமிழ்த்தியவாறு குறித்த சடலம் காணப்படுகிறது. சடலம் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள பாறைப் பகுதியில் சாரம், சேட் என்பனவும் காணப்படுகிறது.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் நிர்வாணமாக காணப்படுகிறது. நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தராமையால் சடலம் மதியத்தை தாண்டியும் அவ்விடத்திலேயே இருந்தது.

இதன் பின் பிற்பகல் 1 மணியளவில் வருகை தந்த திடீர் மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் அச் சடலத்தை பார்வையிட்டதுடன் அதனை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. மரணம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாஸ்கரன் கதீசன்-
1 2 3 4 5 6 7