இலங்கையில் இனி வீதிகளில் செல்ல கட்டணம்!!

1017

இலங்கையில்..

நாட்டிலுள்ள அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளையும் கட்டணச்சாலைகளாக மாற்றுவதற்காக, வீதிப் பராமரிப்பு நிதியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிதியாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முறையான வீதிப் பராமரிப்பை உறுதி செய்வதற்கும் வீதி நிர்மாணம் மற்றும் பராமரிப்பிற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய செலவினங்களைக் குறைப்பதற்கும் ஏனைய நாடுகளுக்கு இணையாக ஆர்.எம்.எப்.ஐ நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.