வவுனியாவில் சூறாவளியால் முறிந்தமரம் அகற்றப்படாமையால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்!!

990

சூறாவளியால் முறிந்தமரம்..

வவுனியாவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி மினிசூறாவளியுடன் கூடிய கடும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் பாரிய மரங்களும் முறிந்து வீழ்ந்திருந்தன.



இந்நிலையில் வவுனியா மாவட்டசெயலக வாயிலில் அமைந்துள்ள மரத்தின் பாரியகிளை ஒன்று மின்சார இணைப்பின் மீது முறிந்து வீழ்ந்தது.எனினும் சூறாவளி வீசி 20 நாட்கள் கடந்த நிலையிலும் குறித்த மரக்கிளை அகற்றப்படாமையினால் பொதுமக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த பகுதி பொதுமக்களின் நடைபாதையாக இருப்பதுடன், மாவட்டசெயலகம், பொது வைத்தியசாலை என்பன அருகில் இருப்பதால் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு இடமாக காணப்படுகின்றது.

அத்துடன் மரக்கிளை மின்சார இணைப்பின் மீது வீழ்ந்துள்ளமையால் அது அறுந்து விழும் நிலையும் ஏற்ப்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த மரக்கிளையை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை அந்த பகுதியை தினமும் பயன்படுத்தி வரும் மாவட்ட அரச அதிபரின் கண்களில் இது படவில்லையா. என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், அந்த மரக்கிளை முறிந்து உயிரிழப்பு ஏற்ப்பட்ட பின்னரா அதனை அகற்றுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.