வெளிநாட்டில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் பலியான சோகம்!!

858

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். 59 வயதுடைய நபரும் 21 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் மற்றொரு குழுவுடன் அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அங்கு குளிப்பதற்குச் சென்ற தந்தை முதலில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவரைக் காப்பாற்ற மகளும் மகனும் முயற்சித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.