முல்லைத்தீவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் மரணம்.. கதறும் பெற்றோர்!!

1526

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் நான்கு வயதுடைய சிறுவன் நிமோனியா காச்சலால் இன்று உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

இந் நிலையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுவன் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.