காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை!!

646

கோவையில்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜன். இவரது மகள் சசிகலா (24). இவர் கடந்த 2013- ஆம் ஆண்டு மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.



அப்போது அங்கு வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வினோத் (28) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் சசிகலாவிற்கு, அவரது உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இதை அறிந்த வினோத், சசிகலாவை தனியாக பேச மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலைக்கு அழைத்துச் சென்று, கொ.டூ.ர.மா.க தா.க்.கி.யு.ம், க.ழு.த்.தை இ.று.க்.கி.யு.ம் கொ.லை செ.ய்.தா.ர். பின்னர் உடலை அருகே தனியார் கல்லூரி அருகே புறவழிச்சாலையில் புதைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வினோத்தை கைது செய்தனர். விசாரணையில் சசிகலாவை கொலை செய்த வினோத், அவரது நகைகளை திருச்சியில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் விற்பனை செய்துள்ளார்.

அதை தொடர்ந்து சசிகலாவின் செல்போனில் இருந்து அவரது பெற்றோர் மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி மூலம் வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டு வேறு மாவட்டத்திற்கு சென்றுவிட்டதாக அனுப்பி உள்ளார்.

இருப்பினும் போலீசார் சந்தேகத்தின் பேரில் கண்காணித்து வந்த நிலையில் வினோத் போலீசிடம் பிடிபட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் கூறிய அடையாளங்களை வைத்து சசிகலா புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த போது, வெறும் எழும்பு கூடுகள் மட்டும் கிடைத்துள்ளது.

அதனை கைப்பற்றிய போலீசார் ஆய்வகத்திற்கு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இறந்தது சசிகலா தான் என்பதும் உறுதியானது. மேலும் சசிகலாவின் உடலை வெறும் 2 அடி பள்ளம் தோண்டி புதைத்ததாகவும்,

ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் நாய் எழும்புகளை எடுத்து சென்றால் தப்பிவிடலாம் என நினைத்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட வினோத், அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கோவை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி வினோத், முதல் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது. பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் மதுரை,

கிணத்துக்கடவு, பேரூர், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி ஆகிய இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து அப்போதைய மாவட்ட செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கடந்த 2021ல் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இளம் பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்தது வினோத் என்பது உறுதியானதால் அவரை குற்றவாளி என்றும், கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை நோக்கத்துடன் கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கோவை மாவட்ட போலீசார் மற்றும் மகிளா நீதிமன்றத்திலும் விரைவில் வி.சாரணை செய்து கு.ற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி வரும் நிலையில் சினிமா பாணியில் இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் கு.ற்றவாளிக்கு த.ண்டனை வ.ழங்கப்பட்டுள்ளது.