சினிமா துறையில் கெட்டவர்கள் உள்ளனர் : சுருதி ஹாசன் வருத்தம்!!

685

Sruthiசுருதிஹாசனின் அரை குறை ஆபாச படங்கள் சமீபத்தில் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. ஏவடு என்ற தெலுங்கு படத்தில் பாடல் காட்சியொன்றில் சுருதி ஹாசன் நடித்த போது இப்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. இவற்றை வெளியிடக் கூடாது என்று அப்போதே தயாரிப்பாளரிடம் உறுதி வாங்கி இருந்தார். ஆனால் அதை மீறி இப்படங்கள் இணையத்தளங்களில் பரவி உள்ளது.

இதனால் சுருதிஹாசன் அதிர்ச்சியில் உள்ளார். ஆபாசப் படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தி ஐதராபாத் பொலிஸில் புகார் அளித்துள்ளார். பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா படப்பிடிப்புகளை படம் எடுக்கும் பத்து போட்டோ கிராபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை குறித்து சுருதிஹாசனிடம் தற்போது கேட்ட போது, நான் இது குறித்து பொலிஸில் புகார் அளித்துள்ளேன். மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை. எல்லா இடத்திலும் இருப்பது போல் சினிமாவிலும் கெட்டவர்களும், நல்லவர்களும் உள்ளனர். நான் நல்லவர்கள் மீதும் நல்ல விஷயங்கள் மீதும் தான் என் கவனத்தை செலுத்துகிறேன் என்றார்.