யாழில் காரொன்று கடலுக்குள் பாய்ந்து விபத்து!!

1056

யாழில்..

வேக கட்டுப்பாட்டை இழந்த காரொன்று கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. எனினும் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான காரை கனரக வாகனத்தின் உதவியுடன் கடலுக்குள் இருந்து மீட்கும் நடவடிக்கையினை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போக்குவரத்து சட்ட விதிமுறைகளுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.