வவுனியாவைச் சேர்ந்த பெண்ணிடம் 14 லட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு!!

610

Jewel

மட்டக்களப்பில் இருந்து தனியாக பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் 14 லட்சம். பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா கோவில்குளத்தை சேர்ந்த பெண் மட்டகளப்பில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு வவுனியாவை நோக்கி பஸ்ஸில் சென்று கொண்டிருந்த வேளையில் அவரது கைப்பையில் உள்ள 14 லட்சம் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டதென வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.