அளுத்கம கடலில் கண்டெடுக்கப்பட்ட சில்லு விமானத்தின் பாகங்கள் அல்ல : விமானப்படை!!

568

Flight

அளுத்கம கடல் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சில்லு போன்ற பொருள் விமானத்தின் பாகங்கள் அல்லவென இலங்கை விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த பொருள் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அது கடந்த மாதத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து கொழும்பில் இருந்து விமானப்படை குழு ஒன்று சம்பவ இடத்துக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டது.

இதன்போது இந்த சில்லு வேறு ஒரு வாகனத்தின் அல்லது இயந்திரத்தின் உடையது என்பது தெரியவந்ததாக விமானப்படையினர் அறிவித்துள்ளனர்.