கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

916

புத்தளத்தில்..

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் பேருந்துடன், கெப் வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து பாலாவி – கற்பிட்டி சம்மட்டிவாடி பகுதியில் இன்றைய தினம் (27.04.2023) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கற்பிட்டி – மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கெப் வண்டியின் சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டியிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்துடன், பாலாவியிலிருந்து கற்பிட்டி சென்ற கெப் வண்டி நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது கெப் வண்டியில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கெப் வண்டியின் சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையிலிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு சென்றவேளை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்..

உயிரிழந்த கெப் வண்டியின் சாரதியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மற்றுமொருவர் குருனாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.