விமான நிலையத்திற்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு!!

494

மலேசியாவில்..

மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து 22 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளது. மேலும் நடைபெற்ற சோதனையில் அந்த பெண் பச்சோந்தியையும் கொண்டு வந்துள்ளார்.

இதன்படி அந்த பெண் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.