கோர விபத்து..
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் இரு பெண்கள் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுகின்றது. இந்த விபத்து இன்று மாலை 4மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கார் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர். விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் உயிரிழந்த நிலையில் காரில் பயணித்த மானிப்பாயைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.