வவுனியா சின்னத்தம்பனை கிராமத்திற்கு வீரேசு குடும்பத்தினரால் பல இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டங்கள்!!

947

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்திற்கு புலம்பெயர் நாட்டில் வசிக்கு வீரேசு குடும்பத்தினரால் பல இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கினங்க 12 இலட்சம் ரூபா நிதியில் சின்னத்தம்பனை பத்திரகாளி கோவில் ஆலயத்திற்கு வாயில் கதவு மற்றும் சுற்றுமதில் , தண்ணீர் தொட்டி போன்ற பல வேலைத்திட்டங்கள் புதிதாக அமைத்தமையுடன் 1 இலட்சம் ரூபாய் நிதியில் சின்னத்தம்பனை கிராம மாணவர்களின் வளர்ச்சிக்காக தண்ணீர் போத்தல், சாப்பாட்டு பெட்டி உட்பட கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது

புலம்பெயர்ந்த நாட்டில் வசித்தாலும் தனது ஊர் மக்களின் நலனுக்காக 13 இலட்சம் ரூபாய் நிதியினை வழங்கியமை தொடர்பில் வீரேசு குடும்பத்தினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.