வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த கொடுமை!!

888

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் பல்வேறு துன் புறுத்தல்களின் பின்னர் நேற்று (04.05.2023) நாடு திரும்பியுள்ளார்.

மஹியங்கனை, தம்பனை பகுதியை சேர்ந் 24 வயதுடைய ஸ்வர்ணா மல்காந்தி என்ற யுவதியே பல்வேறு கொடுமைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர் தனது கிராமத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் சவூதி அரேபியா சென்று பணிப் பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் இன்று நாடு திரும்பிய ஸ்வர்ணா, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

”நான் அதிகாலையில் எழுந்து இரவு வரை வேலை செய்வேன். அந்த வீட்டுப் பெண் மிகவும் கண்டிப்பானவர். அவர் எப்போதும் விரைவாக வேலை செய்ய வேண்டும் என என்னிடம் கூறுவார்.”

”அந்த மேடம் என்னை அடிக்கடி அடிப்பார். எப்போதும் உ தைப்பார். என் தலைமுடியைப் பி டித்து இழுத்து தரையில் தள்ளிவிடுவார்.

கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் மேலும் இரண்டு வீடுகளில் நான் வேலை பார்க்க நேர்ந்தது. இதற்கிடையில், நான் மேடத்தின் அம்மா வீட்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

அப்போது அவரது சகோதரர் எனக்கு பல்வேறு து ன்புறுத் தல்கனைச் செய்தார். ஐந்து முறை நான் சுயநினைவை இழந்தேன். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் என்னிடமிருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.