வவுனியாவில் வெசாக் தினத்தை முன்னிட்டு 15 கைதிகள் விடுதலை!!

641

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் இன்று (05.05) விடுதலை செய்யப்பட்டனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைவாக சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்ற காரணமாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை விடுவித்து வழிஅனுப்பி வைத்தனர்.