வவுனியாவில் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு!!

520


தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (06.05.2023) வவுனியாவில் இடம்பெற்றது.



தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் வவுனியா அலுவலகத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.





குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இதன் போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.