லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்!!

591

நுவரெலியாவில்..

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவிற்கு கோழி உரத்தை ஏற்றி சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் விழுந்துள்ளது.

இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர். எனினும் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பல வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.