ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் காதலன் தோல்வி.. ப்ளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு!!

7090


தமிழகத்தில்..



தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்ததால் உற்சாகம் அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மாணவ, மாணவிகள் வெற்றியை கொண்டாடினர்.



இந்நிலையில், சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் டில்லி- சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் நந்தினி (16), அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.




மாணவி நந்தினி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தொங்குவதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.


தகவல் அறிந்துசென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவி எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என பெற்றோர், போலீசார் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.

நீண்டநேர விசாரணைக்கு பிறகே மாணவியின் இறப்புக்கு காரணம் தெரியவந்தது. அதாவது, ஆவடி கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்த தேவா (17) என்பவர், பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் நேற்று விரக்தியில் தேவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மாணவர் தேவாவும், மாணவி நந்தினியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த நந்தினி,

அந்த விரக்தியில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் மாணவி நந்தினி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.