வவுனியா மின்சார சபையின் அலட்சியப் போக்கு : மக்கள் சிரமம்!!

1762

கடந்த இரண்டு நாட்களாக மின்சார கம்பிகளின் மேல்
மரக் கிளைகள் சரிந்துவீழ்ந்துள்ளதனைப் பாவனையாளர்கள் யாழ் மற்றும் வவுனியா மின்சாரசபை அலுவலகத்திற்கு இரண்டு நாட்களாக முறைப்பாடளித்தும் மின்சார சபை அதிகாரிகளால் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் வவுனியா ஸ்ரீராமபுரம் கிராமத்தின் தொல்காப்பியர் வீதியின் வதிவிட மின்பாவனையாளர்கள் தமது மின்உபகரணங்களை உபயோகிக்காது அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

இக்கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர் மின் தடை ஏற்பட்டிருந்த வேளையும் இ.மி.ச. அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.