11 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி : பௌத்த பிக்கு செய்த மோசமான காரியம்!!

1232

மொரட்டுவையில்..

மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடையவரான 62 வயதான பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதான பௌத்த பிக்கு இன்றைய தினம் (17.05.2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறுமி 36 வயதான தமது தாயுடன் கல்கிசை பகுதியிலுள்ள சொகுசு மாடிக் கட்டடத்தில் இருந்துள்ளார்.

இதன்போது அங்குப் பிரவேசித்த 62 வயதான பௌத்த பிக்கு, குறித்த சிறுமியின் தாயாருக்குப் போதைப்பொருளை வழங்கி அவரை மயக்கமடையச் செய்துள்ளார். இதனையடுத்து, குறித்த 11 வயதான சிறுமியைப் பௌத்த பிக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.