திருமணமான 3வது நாளிலேயே கணவனின் மடியில் புதுப்பெண் மரணம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

716


திருச்சியில்..



திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (31). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரெஸ்பாகா (25) என்ற இளம்பெண்ணுக்கும் பெற்றோர் திருமணம் பேசிமுடித்தனர்.



அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஸ்டீபன் – ரெஸ்பாகா திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும், மறுவீடு அழைப்பிற்காக பெண்ணின் வீட்டிற்கு புதுமண தம்பதிகள் வந்திருந்தனர்.




திருமணம் முடிந்து முதல்முறையாக பெற்றோர் வீட்டிற்கு வந்ததால் ரெஸ்பாகா உற்சாகமாக இருந்தார். விருந்து உபசரிப்பு என களைகட்டியது. இந்த விருந்திற்கு பிறகு, மறுபடியும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல இளம் தம்பதி தயாராகினர்.


அப்போது, மகளை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுது, மகளை வழியனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர். ஸ்ரீரங்கம் பகுதியில் பைபாஸ் சாலையில், கார் சென்று கொண்டிருந்போது ரெஸ்பாகா திடீரென்று மயங்கி பக்கத்தில் இருந்த மாப்பிள்ளை மீது சாய்ந்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக, திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரெஸ்பாகாவை அழைத்து சென்றனர். அங்கு ரெஸ்பாகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதனை கேட்டு புதுமாப்பிள்ளை ஸ்டீபன் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினார். என்ன செய்வதென்று தெரியாமல் பதறினார். பிறகு, மணப்பெண் வீட்டிற்கு தகவல் தரவும், அவர்கள் கதறிக்கொண்டே ஓடிவந்தார்கள்..

மகளை பார்த்து துடிதுடித்து அழுதனர். அவர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சென்ற போலீசார், ரெஸ்பாகாவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திருமணம் நடந்து 3வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான விசாரணைக்கு பிறகுதான் முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.