நாட்டை வந்தடைந்தது இலங்கைப் பெண்ணின் சடலம்!!

812

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் உயிரிழந்த வீட்டுப் பணிப்பெண்ணின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

அவரது சடலம் தொடர்பில் அவசர விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ்சின் பணிப்புரைக்கு அமைவாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

தங்கொடுவ – மொதெமுல்ல பிரதேசத்தில் இருந்து வெளிநாடு சென்றிருந்த 41 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தான் பணிபுரிந்த வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து வந்த பிரச்சனையால் இலங்கை செல்ல விரும்புவதாக தோழிகளிடம் ஏற்கனவே கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் கீழே விழுகின்ற காணொளி ஒன்றும் தற்போது பகிரப்பட்டு வருகின்றது