அதிக மழையுடன் கூடிய காலநிலையால் சில கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களு கங்கை, ஜின் கங்கை, நில்வலா கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டமே உயர்வடைந்து காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.