இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஜீத்திர சேனாநாயக்க சந்தேகத்திற்குறிய பந்து வீச்சில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கடந்த 30ம் திகதி இடம்பெற்றது.
இதன்போது இவர் பந்து வீசிய முறை தொடர்பிலேயே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தமக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் எனினும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட மாட்டார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.