இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 3-2 என கைப்பற்றிய இலங்கை அணி!!

249

SL

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த அணி சார்பில் களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குக் சிறப்பாக ஆடி 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

எனினும் பின் வந்த வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வெளியேற 48.1 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இங்கிலாந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க மூன்று விக்கெட்டுக்களையும், அஜந்த மெண் டிஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் 6 விக்கட்டுகளால் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி தொடரை 3-2 என கைப்பற்றியது.

இலங்கை அணி சார்பாக மகேள ஜெயவர்தன 53 ஓட்டங்களையும், லகிரு திருமான 60 ஓட்டங்களையும், மத்திவ்ஸ் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப் போட்டியின் சிறப்பாட்டக்கரராக திருமானவும் தொடரின் சிறப்பாட்டக்காரராக லசித் மலிங்கவும் தெரிவுசெய்யப் பட்டனர்.