வவுனியா – ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பளை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் இருந்தே இவர் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.