முதலையிடம் விளையாடி கையை இழந்த நபர்.. வைரலாகும் வீடியோ!!

534

முதலை..

ACசமூக வலைதளங்களில் காலக்கட்டத்தில் நாம் இப்போது உள்ளோம். செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு கிடைப்பது எளிதாகிறது. அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இப்படியான சூழலில் நாள்தோறும் பல்வேறு வகையான வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில், தற்போது ஒரு முதலை தொடர்பான நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் கத்தியுடன் ஒரு மனிதன் முதலையிடம் செல்கிறார். அந்த நபர் அந்த முதலையை கத்தியால் தாக்க முயற்சிக்கிறார்.

இதனை உணர்ந்த முதலை, அந்த நபர் முதலையை தாக்க வரும்போது அது, அவர் சிறிதும் எதிர்பாராத வண்ணம் அவர் கையை கவ்வி பிடித்துக்கொள்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வலியால் துடிக்கிறார்.

இந்த வீடியோ @crazyclipsonly என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘மனிதன் தாக்கினான்…முதலை பதிலடி கொடுத்தது’ என்று இதன் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ 80 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் நெட்டீசன்கள் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இதற்கு ஒரு பயனர், ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என கமெண்ட் செய்துள்ளார்.