வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறக்க முனைப்பு : இராஜாங்க அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்!!

593

வவுனியாவில் கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையமானது 291 மில்லியன் பெறுமதியில் பல இழுபறிகளுக்கு மத்தியில் வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் அமைக்கப்பட்டது.

எனினும் தற்போது மரக்கறி மொத்த விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களின் கடும் நிபந்தனைகள் மற்றும் அரசாங்கத்தின் மந்த செயற்பாடுகளால் திறக்கப்படாமல் காணப்பட்டது.

இந்நிலையில் பல தடவைகள் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்காக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
பார்வையிட்டபோதும் திறக்கப்படாமல் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் பொருளாதார மத்திய நிலையம் திறப்பதற்காக பார்வையிட்டிருந்தார். இதன்போது விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர், வவுனியா அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.